NEETஐ ஏதோ “விடாது கருப்பு” rangeக்கு சித்தரித்து “வருடா வருடம் நரபலி வாங்கும் NEET” என்று திருவாய் மலர்த்திருக்கிறார் செயல்.
எனது உறவினர் ஒருவர் மதுரையில் வசித்து வருகிறார். ஒரே பெண். Single mom. பெண் பிரமாதமாக படிக்கக்கூடியவள். மருத்துவப்படிப்பு என்பது அந்த குடும்பத்தின் லட்சியம் . மதுரையில் ஒரு கடை வைத்து மகளை படிக்க வைக்கிறார். கடினமான வாழ்க்கை. இன்று காலை NEET தேர்வு எழுதும் அந்த மாணவிக்கு வாழ்த்து சொல்வதற்காக அழைத்திருந்தேன். தாய் ஒரு கோவிலில் இருந்தாள், எப்படியும் NEETல் தேர்வில் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காக. படிப்புக்கு போதுமான நிதி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அந்த தாய் சொன்ன வார்த்தைகள
“NEET ல வந்தா 13,000 தான் sir வருஷத்துக்கு fees. இந்த NEET இல்லைன்னா 4 லட்சம் “payment quotaல” அதை விட்டா மேனேஜ்மென்ட் quota 15 லட்சம். எப்படியாவது NEETல பாஸ் ஆயிட்டா, வீட்டுல எல்லாம் சரி ஆயிடும் sir”.
நானும் google செய்து பார்த்தேன். 13000 ரூபாய்தான் வருடாந்திர கட்டணம். இது இல்லாத பட்சத்தில் பல லட்சம் செலவழியும். ஏழை மாணவருக்கு 15 லட்சம் எல்லாம் நடக்கிற காரியமா? 15 லட்சம் எங்கே 13,000 எங்கே
அந்தத் தாயின் வார்த்தைகளில் நான் கண்டது:
“எங்கள் வீட்டிலும் ஒரு டாக்டர் வரப்போகிறாள்” என்ற தன்னம்பிக்கை. அதற்கு பணம் பெரிய தடை இல்லை என்ற நிம்மதி. உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற உந்துதல். இவையெல்லாம் ஒரு சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்லும் அருமையான விஷயமல்லவா!
இதையா “நரபலி வாங்கும்” என்று ஒரு பெரிய கட்சியின் செயல் தலைவர் சொல்கிறார்? என்ன சிறுபிள்ளைத்தனம் இது? சிறுபிள்ளைத்தனமா இல்லை குள்ளநரித்தனமா? இதில் “ஏழைப் பங்காளன்” என்று பீத்திக்கொள்வதில் குறைச்சல் ஒன்றும் இல்லை.
அரசியலை விலக்கிப் பார்த்தால், NEET எவ்வளவு பெரிய வரம் என்று புரிகிறது. ஏன் அரசியல் வாதிகள் NEETஐ நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் என்று துடிப்பதும் புரிகிறது.
“பணம் பத்தும் செய்யும்” என்ற நிலையில் இருந்து “திறமை வெற்றி தரும்” என்ற ஒரு தலத்திற்கு செல்லும் முன்னேற்றப் பாதை அல்லவா இது!
NEETக்காக போராடுபவர்கள் வெறும் கட்சிக்காரர்கள் தானே ஒழிய, பொதுமக்கள் இல்லை என்பது கண்கூடு. NEET வேண்டாம் என்று சொல்வது ரேஷன் கடைகளை மூடச்சொல்லி பெரிய mallகளில் சென்று ஏழைகளை அரிசி வாங்கச்சொல்வது போன்றது. யார் இந்த மடத்தனத்தை ஆதரிப்பர்?
